தமிழகத்தில் மே 28-ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...