திருப்பூரில் குவியும் குப்பைகள் : சேகரிக்க இடமின்றி திணறும் மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி குவியும் குப்பைகள் நல்லூர் அருகே உள்ள பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பாறைக்குழி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. 

இதனையடுத்து கஞ்சம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குப்பைகளைக் கொட்ட போதிய இடம் கிடைக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமலே இருந்து வருகிறது. சாலையோரங்களில் குப்பைகள் தேங்கிய நிலையிலேயே கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து குப்பை கொட்டுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...