மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சிறுத்தைகளின் ஊடுருவலும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாறைப்பள்ளம், பனப்பாளையம், மேடூர், கண்டியூர் கிராமங்களில் கடந்த இரு மாத காலத்தில் இருபதிற்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு ஆடுகளாகும். நள்ளிரவு நேரங்களில் ஆட்டுப்பட்டிக்குள் நுழையும் மர்ம விலங்கு அங்குள்ள ஆடுகளை மட்டும் குறி வைத்து தாக்கி கொன்று அதன் உறுப்புக்களை உண்டு விட்டு செல்கின்றன.

இதனால் அச்சத்தாலும், இழப்பாலும் தவித்த மக்கள் இது குறித்து தொடர்ந்து வனத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், நேற்றிரவு மீண்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சி மேடூர் கிராமத்தினுள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த நான்கு ஆடுகளை கடித்து கொன்றுள்ள நிகழ்வு இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், உடனடியாக வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள், இதனால் தாங்கள் தோட்ட வேலைக்கு செல்லவோ வெளியில் நடமாடவோ கூட அச்சப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, நிகழ்விடத்தினை ஆய்வு செய்த காரமடை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அந்த கிராமத்தில் நடமாடும் வனவிலங்கினை பிடிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...