வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்ட விவகாரம் : சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை ரூ. 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல, ஏராளமானோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கடந்த 2-ம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சைபர் கிரைம் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் வங்கி நிர்வாகத்தினர் மூடினர். தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 40,000 முதல் ரூ. 4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியைக் கொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...