கடும் மழையிலும் நடைபெற்றது புலிகள் கணக்கெடுப்பு

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



நேற்று காலை 6.30 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்தனர். அவர்கள் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் தங்களது பணியினை தொடர்ந்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜி.பி.எஸ்., கருவி மூலம் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மற்றும் நாளை ஊனுண்ணிகளின் கணக்கெடுப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள். இதில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு நாய் ஆகிய விலங்குகள் அடக்கம்.



சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ஏழு வனச் சரகங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றது." என்றனர்.

வனப்பகுதிகளில் நேற்று கடுமையான மழைப் பொழிவு இருந்த போதிலும், கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...