சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய ராமலிங்கம் நகர் மக்கள்

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கடந்த 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அன்றைய தினமே, அந்த பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்றும் வகையில் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

தொடர்ந்து, சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கென இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இதில் கோயம்புத்தூர் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ஜனார்த்தனன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுப்புறத்தில் மரம் நடுவதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டனர்.



கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...