பில்லூர் அணை திறப்பால் வெள்ளப் பெருக்கு: பவானி ஆற்றின் கரையோர பாதுகாப்பு குறித்து கோவை ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றின் கரையோரப் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை நிரம்பியது. இதனால், பாதுகாப்பு கருதி அணை நேற்று திறக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிறுமுகை, ஒடந்துரை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், நெல்லித்துரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், வெள்ளபெருக்கு காரணமாக வருவாய்த்துறை எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஓடந்துரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், இரவு முழுவதும் தண்ணீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தொடர்ந்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...