வால்பாறையில் தொடரும் கனமழை: தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில், வால்பாறையில் பல இடங்களில் சாலைகள் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.



இதேபோல, நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.



இதேபோல, சோலையார் அணைக்கு செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் வால்பாறை - சோலையார் அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனிடையே, வால்பாறையில் பலத்த மழை காற்று காரணமாக காமராஜ் நரில் மல்லிகா என்பவரது வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...