நீர் வரத்து அதிகரிப்பு: இன்னும் மூன்று அடியில் நிரம்பக் காத்திருக்கிறது பில்லூர் அணை

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில், இன்னும் மூன்றே அடியில் பில்லூர் அணை நிரம்ப உள்ளது.


கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில், இன்னும் மூன்றே அடியில் பில்லூர் அணை நிரம்ப உள்ளது.

நடப்பு ஆண்டில் பருவமழை தொடங்கும் முன்பே கோவையில் மழை வரத்து அதிகரித்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மழைப் பொழிவு உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.



அதிக நீர்வரத்து காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

பில்லூர் அணை

பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் நூறு அடி என்ற நிலையில், கடந்த பத்தாம் தேதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனையடுத்து அன்றைய தினமே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. 

இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இன்னும் மூன்றே அடியில் மீண்டும் அணை நிரம்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணைகள் (கோவை) 






சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 103.84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 6273.50 கன அடியாக உள்ளது. 

பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 11.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 58.40 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 240 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 34 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு (கோவை)







கோவையில் நேற்று சராசரியாக 43.31 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் ஓவொரு பகுதியிலும் பெய்த மழை அளவுகளின் விவரங்கள் பின்வருமாறு. 

பீளமேடு 14.90 மி.மீ, மேட்டுப்பாளையம் 9.00 மி.மீ, பொள்ளாச்சி 2.00 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 7.00 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, வேளாண் பல்கலை., 25.60 மி.மீ, சின்கோனா 127 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 89 மி.மீ, வால்பாறை 95 மி.மீ. கோவை தெற்கு 20 மி.மீ, சின்னக்கல்லார் 125 மி.மீ.




மழை அளவு (நீலகிரி) 

கிளன்மார்கன் 44 மி.மீ, அவலாஞ்சி 164 மி.மீ, எமரால்டு 45 மி.மீ, அப்பர் பவானி 186 மி.மீ, கேத்தி 48 மி.மீ, கூடலூர் 87 மி.மீ, தேவாலா 92 மி.மீ. போர்த்திமுண்டு 97 மி.மீ, பார்சன் வேலி 84 மி.மீ, முக்கூர்த்தி 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...