தினசரி மார்க்கெட் இடைத்தரகர்களைக் கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : தினசரி மார்கெட்டில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட காய்கறிகளை நேரடியாக விற்க வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் வருவதற்குள் வெளிமாநில காய்கறிகளை விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இடைத்தரகளை கண்டித்து தினசரி மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது,  மார்கெட்டிற்குள் சென்ற விவசாயிகள் இடைத்தரகர்களிடம் இனி காய்கறிகளை விற்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரிடையே சமரசத்தை ஏற்படுத்தினர். பின்பு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர். 

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...