அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட சிறிய கனரக வாகனம்

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை .- அவினாசி நெடுஞ்சாலையானது, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகத் தான் தொடங்குகிறது. பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று ரயில்கள் செல்லும் பாலத்தின் அடியே வாகனத்தின் மேற்கூரை சிக்கியது. 

இதனால், வாகனத்தை நகர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்தனர். பிறகு, வாகனத்தின் மேற்பகுதி பாலத்தில் சிக்கியதால், உடனடியாக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், நீண்ட முயற்சிக்குப் பிறகு, வாகனத்தின் பகுதியை மேம்பாலத்தில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...