புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மலைவாழ் இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. 



இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது. 



"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். 

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...