கோவை - மஸ்கட் இடையே விமானசேவையை தொடங்குகிறது ஓமன் ஏர்ஸ்?

கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மஸ்கட்டில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் ஏர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மஸ்கட்டில் இருந்து கோவைக்கு விமானத்தை இயக்க ஓமன் ஏர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக ஓமன் ஏர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அளித்த பேட்டியில், "எங்களது நிறுவனம் இந்தியாவிற்கான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதாவது, இந்தியாவிற்கு 27,000 இருக்கைகளாக இருக்கும் தங்களது சேவையை 60,000 இருக்கைகளாக அதிகரிக்க உள்ளோம். அதன்படி, மஸ்கட்டில் இருந்து மங்களூரூ, கோவை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த சேவையில், ஏ-330எஸ் ரக மற்றும் டிரீம்லைனர்ஸ் போன்ற விமானங்களை இயக்கப்படும்." என்றார். 

கோவைக்கு சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை-மஸ்கட் இடையிலான விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்ட மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...