நீலகிரியில் கரடி தாக்கி பெண் படுகாயம் : கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது மக்களைத் தாக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், குன்னுார் அருகே நேர்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் (42) என்பவரது மனைவி மேகலா (30) வீட்டிற்கு விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று மேகலா மேல் பாய்ந்து தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் கரடியை கட்டையால் தாக்கி விரட்டினர். கரடி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. பின்னர், படுகாயமடைந்த மேகலாவை குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அதே பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...