கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர். 

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் திறந்து வைத்தார். மேலும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் பொருத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று முறை சார்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ. 17,000 கல்வித் தொகைக்கான காசோலை, கல்வி உபகரணங்கள் மற்றும் ரெடிமேடு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது பட்டப்படிப்பு முடித்த 15 பேருக்கு 'இளம் சாதனையாளர் விருது" சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி ஊக்குவித்தார். மேலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களுக்கு போர்டு கார் நிறுவனம் மற்றும் ஹெல்பிங் மைன்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் உலக உருண்டைஉள்ளிட்டவைகளை சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...