திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...