திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...