"நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும்"

கோவை : வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

கோவை : வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார். 



ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் முழு கணினி மயமாக்குதல் குறித்த பயிற்சி அரசு அலுவலர்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் 16 வரை நிர்மலா கல்லூரியில் நடக்கிறது. இதில், கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலரும் கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையர் ஜவகர், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வன அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது :- பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதன் மூலம் வரும் காலங்களில் பணி மாறுதல் மற்றும் ஓய்வூதியம் ஆகியன எளிதாகிவிடும். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை அரசு ஊழியர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும், என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் 32,847 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 32,000 கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களும் விரைவில் இதில் இணைக்கப்படுவார்கள். காகிதமற்ற பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் போது வேலை எளிதாகிவிடும்," எனக் கூறினார்.



பின்னர், அரசு முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையருமான ஜவகர் கூறியதாவது :- தமிழகத்தில் கருவூலங்கள் 1964-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் கருவூலங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இதுவரை கருவூல கணக்குகள் காகித கட்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டு வந்ததால், காலம் மற்றும் நேரம் விரயம் ஏற்பட்டது. கணினி மயமாக்கப்படும் போது அரசு ஊழியர்களின் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.



இதற்கு முன்பு அரசு ஊழியர்களின் தகவல்கள் சர்வீஸ் ரெஜிஸ்டர் மூலம் அறியப்பட்டு வந்தது. கணினிமயமாக்கப்படும் போது, ஒருவருடைய அனைத்து தகவல்களும் எளிதாகிவிடும் என்பதால், இந்த முயற்சிக்கு முழுமுயற்சி எடுத்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொற்கள் வழங்கப்படும். தற்போது, 150 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 3,000 பேருக்கு வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் பயிற்சி அளிக்கப்பட்டு, காகிதமற்ற பரிவர்த்தனையாக மாற்றப்படும், என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...