கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடக்கம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மலேசியாவைத் தாயகமாக கொண்ட துரியன் பழங்கள் நம் நாட்டில் மிகக் குறைந்த மலைசார்ந்த பகுதிகளிலேயே விளைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லார் மற்றும் பர்லியார் பகுதிகளில் இவ்வகை துரியன் பழ மரங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன.



நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷின நிலை நீடிப்பதால், இங்கு துரியன் பழ மரங்கள் செழித்து வளர்கின்றன. துரியன் பழங்களின் சீசன் ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இப்பண்ணையில் விதைக்கப்பட்ட இம்மரங்கள் ஒவ்வொன்றும் தற்போது சுமார் 200 அடிக்கும் மேல் மிக உயரமாக வளர்ந்துள்ளது.

தற்போது சீசன் துவங்கியுள்ளதால் இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான துரியன் பழங்கள் காய்த்துள்ளன. முட்கள் நிறைந்த உயரமான இம்மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவே, இதில் உள்ள பழங்கள் பழுத்துத் தானாக விழும் வரை காத்திருந்து, துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறிய வகை பலாப்பழங்களை போல் முட்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால், உள்ளே நான்கு சுளைகள் கொண்ட பழங்கள் காணப்படும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகள், இவற்றை உண்டால் குழந்தைப்பேறு கிட்டும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் சில மாதங்களில், அதிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. பலரும் இங்குள்ள அரசு பழப்பண்ணைகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து, தற்போது இப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கல்லார் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விளையும் துரியன் பழங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள பழக்கடைகளிலும் விற்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...