உதகை பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருநாவுக்கரசர்

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஊட்டி பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. அவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தேசிய சுற்றுலாத் தளமாக உதகை விளங்கி வரும் நிலையில், அங்கு அனைத்து வசதிகளும் கொண்ட மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட வேண்டும். அப்போது, உயிரிழப்புகள் தடுக்கப்படும். ஏனெனில் ஒவ்வொரு விபத்தின் போதும், உயர்சிகிச்சை பெற கோவைக்கு தான் வர வேண்டியதாக உள்ளது. எனவே, உதகையில் மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட வேண்டும். மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாகவும், நல்ல முறையிலும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பதெல்லாம் காலாவதியான பேருந்துகள்தான். எனவே, மலைப்பகுதிக்கு நல்ல தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். என்றார்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு குறித்து அவர் மேலும் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல்காந்தி குடும்பத்தினர் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினர். இருப்பினும், தற்போது குடியரசுத் தலைவர் அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளது என்பது அவரின் கருத்து. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் இனி நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கலாம். மனஅழுத்தம், வருத்தம் காரணமாக பேரறிவாளனைக் கருணை கொலை செய்யுமாறு அற்புதம்மாள் கூறுவது ஏற்புடையது அல்ல.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் வேறு, வேறு கருத்துகளை கூறியுள்ளனர். இதனை வழங்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனவே, மூன்றாவது நீதிபதி விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் இது தனி நபர் பிரச்சனை அல்ல. தொகுதி மக்களின் பிரச்சனை. இது 18 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்த 40 லட்சம் மக்களின் பிரச்சனையாகும். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியில் இருக்கிறோமா..? இல்லையா..? என்பது கூட தெரியாமல் உள்ளனர். இதனால், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, நீதிமன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், என்றார். மேலும், இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...