கவிஞர் கவிதாசனுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கிய கோவை ரோட்டரி சங்கம்

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டிலும், தனிமனித முன்னேற்றத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், தமிழ் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில், கவிஞர் கவிதாசன் பேசுகையில், "நெல்லிக்கணி என்ற இளைஞர் முன்னேற்ற திட்டத்தில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை இளைஞர்களோடும் மாணவர்களோடும் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதற்காக அளிக்கப்பட்ட இந்த விருதை என்னோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலையிலும் இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.



விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் A. பாரி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி மற்றும் மாவட்ட தொழில் சேவை இயக்குனர் N.சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ரோட்டரி சங்க தலைவர் சாண்டியாகோ ஜேசு, திட்ட தலைவர் டாக்டர்.சித்ரா மனோகர், செயலர் ஜ்யோதிஷ் N.பிள்ளை, தொழில் சேவை இயக்குனர் டாக்டர்.N.மகேந்திரன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...