மேட்டுப்பாளையத்தில் நாட்டு மாடு வகைகளின் கண்காட்சி: பாரம்பரியத்தை காக்க இளைஞர்கள் முயற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளிடையே நாட்டு மாட்டு வளர்ப்பை ஊக்குவிக்கவும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் நாட்டு மாடுகளின் கண்காட்சியை நேற்று நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளிடையே நாட்டு மாட்டு வளர்ப்பை ஊக்குவிக்கவும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் நாட்டு மாடுகளின் கண்காட்சியை நேற்று நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மூடுதுறை ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அப்பகுதி இளைஞர்கள் கோவிலின் வளாகம் அருகிலேயே நாட்டு மாடு கண்காட்சியினை நடத்தினர்.



விவசாயத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 'நமது ZOO' என்ற பெயரில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் உழவுக்குப் பயன்படுத்தப்படும் காளைகள், பால் கறவை நாட்டு மாடுகள், குட்டை ரக காளைகள், காங்கேயம் காளைகள் என 18 வகையான நாட்டு மாடுகளை வைத்திருந்ததோடு, உள்நாட்டு நாட்டுக் குதிரைகளும் கோழி வகைகளையும் வைத்திருந்தனர்.



கோவில் விழாவிற்கு வந்திருந்த மக்கள் இதனை மிகுந்த ஆர்வதுடன் கண்டு ரசித்ததோடு அதன் தன்மைகளையும் கேட்டறிந்தனர். கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் முக்கிய உப தொழிலாக இருக்கும் நிலையில், பலரும் தற்போது பல்வேறு காரணங்களினால் இதனை கைவிட்டு வருகின்றனர் அல்லது நாட்டு மாட்டு ரகங்களை விட்டுவிட்டு நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ஜெர்சி ரக வெளிநாட்டு மாடுகளை வளர்க்கின்றனர்.



இதனை மாற்றி மீண்டும் நமது விவசாயத்தை பாரம்பரிய முறைக்கு மாற்றவும், இயற்கை உரங்களை அள்ளித்தரும் நாட்டு மாட்டு வளர்ப்பை அவர்களிடையே ஊக்குவிக்கவுமே இக்கண்காட்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தங்களின் இம்முயற்சி பெரிதும் பலனளிப்பதால் இது போன்று கிராம விழாக்களில் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படுவதன் மூலம் நமது பாரம்பரிய விவசாய முறைகளையும் கால்நடை வளர்ப்பையும் மீட்டு எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...