குடியிருப்புகளுக்குள் பரவிய பஞ்சுகள் அப்புறப்படுத்தல்: பங்கஜாமில்லில் பஞ்சுகள் வெளியேறாமல் இருக்க வலைகள் அமைப்பு

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.



புலியகுளம் அருகே உள்ள பங்கஜாமில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சாலையில் இருந்து வெளியேறிய பஞ்சுகள் பெரியார் நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் பரவியது. சாலையெங்கும் பனி போல படர்ந்திருந்த பஞ்சுகள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்தன.



மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பஞ்சு படர்ந்ததோடு, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றிலும் கலந்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதல் பெரியார் நகரில் படர்ந்திருந்த பஞ்சுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பஞ்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து பங்கஜாமில் அதிகாரிகள் கூறியதாவது:- மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் எதுவும் வெளியேறவில்லை. நுண்ணிய பஞ்சு துகள்களை பிரித்தெடுக்கும் வலை கிழிந்ததால், நல்ல பஞ்சு வெளியேறியது. கிழிந்த வலை உடனடியாக சரி செய்யப்பட்டு பஞ்சு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க வலையில் பில்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...