கோவையில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.



உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை கண்டறிய கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவுண்டம்பாளையம், சங்கனூர் சாலை, ஆவாரம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள் மற்றும் பழச்சாறு கடைகளில் இன்று சோதனை நடைபெற்றது.



உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் உரிமம், பாக்கெட் உணவு வகைகளின் காலாவதி தேதி, தின்பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், டீ தூளின் தரம், உணவு பாதுகாக்கப்படும் முறை, குளிர்பானங்களின் காலாவதி தேதி ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர்.



சங்கனூர் சாலை அருகே அமைந்துள்ள டீ கடையில், சுத்தமில்லாத தண்ணீர் பயன்படுத்துவது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு, கடை உரிமையாளிரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் கிருபாகரன் பேசுகையில், "நகரில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்தும் பேக்கரிகளில் எந்த சுகாதார விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. தொடர்ந்து இது போன்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்." என்றார்.

சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இதுபோன்று தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கலப்பட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...