கோவையில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டி தொடக்கம்

கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார். 



கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நடக்கும் இந்தப் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், "சிறிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினால் உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசுகளின் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அருமையான அடித்தளமாகும்," என்றார். 



'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்திற்கு ரூ.75,000-ம், 3-வது இடத்திற்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 



Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...