தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்ட தொகுப்பூதிய பணியாளர்கள்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 550 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிவரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய உயர்வு அடிப்படையில் பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படாத சூழலில் பாரதியார் பல்கலைக் கழக பொறுப்பாளரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான சுனில் பாலிவால் தலைமையில் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

அப்போது அங்கு திரண்ட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக உயர்கல்வி துறை செயலரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்கல்வித் துறை செயலர், கடந்த 2015-ம் ஆண்டு ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் 25 சதவிகிதம் ஊதியம் உயர்த்தி வழங்குவதாகக் கூறினார். ஆனால் அதனை ஏற்காத பணியாளர்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, கூட்டம் முடிந்து வெளியே வந்த சுனில் பாலிவாலை முற்றுகையிட்ட பணியாளர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர் அப்போதும்  அவர்களை சந்திக்க மறுத்த உயர்கல்வித் துறைச் செயலர் தற்போது 25 சதவிகித ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும் எனவும் புதிய குழு ஒன்றை அமைத்து ஊதியத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியத்தில் முரண்பாடு உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட புதிய ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையிலும் தவறுகள் இருப்பதால் அதனை செயல்படுத்த முடியாது. மேலும், இது தொடர்பாக பணியாளர் சங்க நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...