நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வந்தால் அபாரதம்: வெளிமாநிலத்தவர்களுக்கு எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அதை உட்கொண்டு வன விலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாகு நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார். மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட எல்லைகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம் என விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களிடையேயும், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கடந்த 13-ம் தேதி 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை கக்கநல்லா சோதனை சாவடியிலும், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பாட்ட வயல், நாடு காணி போன்ற சோதனை சாவடிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



பிளாஸ்டிக் பொருட்கள் காரில் இருந்தால் ரூ.50-ம், டெம்போ டிராவலருக்கு ரூ.100-ம், சுற்றுலாப் பேருந்துகளுக்கு ரூ. 250-ம், சில்லரை விற்பனைக்காக எடுத்து வரும் வாகனங்களுக்கு ரூ.10,000-ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...