ஈஷா யோகா மையத்தில் 21-ம் தேதி சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 

ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் ஈஷா அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

112 அடி ஆதியோகி முன்பு காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிவிரைவு படை (Rapid Action Force) துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் திருமதி சி.ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

மேலும், 400 அதிவிரைவுப் படை வீரர்கள், 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்திவாய்ந்த ‘உப-யோகா’ இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 

கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...