தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 



சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையின்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக எய்ம்ஸ் அமைவது எங்கே? என அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்த நிலையில், தற்போது மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் பயன்பெறும் 13 மாவட்டங்கள் மட்டுமின்றி கேரள மாநிலமும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...