ஒருவழியாக கிடைத்தது ஜாமீன்: 'எஸ்கேப்' ஆனார் எஸ்.வி. சேகர்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகருக்கு சென்னை எழுமபூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகருக்கு சென்னை எழுமபூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். எனவே அவரை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

மேலும், பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெறுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், எஸ்.வி. சேகர் ஆஜராகாமல், உல்லாசமாக சுற்றித் திரிந்து வந்தார்.

இதனிடையே, எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி. சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கிடையே எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, இந்த வழக்கில், ஜாமீன் அளிக்குமாறு எஸ்.வி. சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், மீண்டும் 18-ம் தேதி ஆஜராக எஸ்.வி. சேகருக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...