சிறையிலிருந்து தப்பியவர்களை சினிமா பாணியில் பிடித்த குன்னூர் போலீஸ்..!

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கதவை சில தினங்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் தாஜிதீன் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த கொள்ளையர்கள் வண்டிச்சோலை பகுதியிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த நிலையில், திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர். 

அவர்களை விடாது விரட்டிய மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன், உதவி ஆய்வாளர்கள் சண்முகம், யுவராஜ் ஆகியோர் விரட்டினர். சிக்காத கொள்ளையர்கள் நகரப் பகுதிகளுக்குள்ளே சென்று மறைந்தனர். போலீசாரின் சமயோசித புத்தியால் அவர்கள் மூவரும் அகப்பட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), குமரன் (23), குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பது தெரியவந்தது. 

இவர்கள் மீது ஏற்கனவே கோவை மற்றும் தேனி பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் குன்னூர் சிறையிலடைத்தனர். 



இந்த சூழலில், கொள்ளையர்கள் மூவரும் சிறையில் இருந்து மதியம்1:30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓடினர். அவர்களை தாக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதோடு அங்கிருந்த தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர். 

திருடர்களை விரட்டிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...