பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பஞ்சாலை சங்கங்கள் வலியுறுத்தல்

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி கூறியதாவது :- கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது. வியட்னாமில் இருந்து சீனாவில் இறக்குமதியாகும் பருத்தி நூலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம். 

வியட்னாமில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி வரிகள் இல்லை என்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இருந்தபோதும், இந்திய பருத்தி நூலின் தரம் காரணமாகத் தொடர்ந்து ஏற்றுமதி இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் புதிய ஸ்பிண்டில்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்பிண்டில்கள் மாற்றப்பட்டு வருவதால், இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்த போதும், நூல் உற்பத்தி அதிகரிக்கவில்லை. 

பஞ்சாலைகள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு இதுவரை ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. எனவே, இலாபம் குறைவதை கருத்தில் கொண்டு, இவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட பஞ்சை கண்டறிய அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க எடுக்க வேண்டும். இது தொடர்பாக பஞ்சாலை சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...