பிரீமியர் லீக் போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் பலம் அதிகம்: கோவையில் அபிநவ் முகுந்த் பேட்டி

பிரீமியர் லீக் போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் பலம் அதிகம்: கோவையில் அபிநவ் முகுந்த் பேட்டி


கோவை: மூன்றாவது பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளதாக இந்திய கிரிகெட் அணி வீரர் அபிநவ் முகுந்கோவை: மூன்றாவது பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது என்று இந்திய அணி வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் சார்பில் மூன்றாவது சீசன் லீக் போட்டிகள் ஜூலை 11-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12-ம் தேதி  முடிவடைகிறது. 

இந்த நிலையில், விளையாட்டு குறித்து லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிநவ் முகுந்த் மற்றும் இந்திய 'ஏ' அணி வீரர் பாபா அபர்ஜித் ஆகியோர் கோவையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பாபா அபர்ஜித் கூறுகையில், "மூன்றாவது டி.என்.பி.எல்., போட்டிகள் இளைய தலைமுறை வீரர்களுக்கு சிறப்பாக அமையும் என நம்புகிறேன். இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.



தொடர்ந்து, அபிநவ் முகுந்த் கூறுகையில், "கடந்த ஆண்டு வேறு அணிக்காக விளையாடினேன். இந்த ஆண்டு லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன். கோவையில் இருந்து மூன்று வீரர்கள் அணிக்காக விளையாட உள்ளனர். 

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற உள்ள போட்டிகளில் திறன் வாய்ந்த வீரர்களை கண்டறிய உதவும். 

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "பெரும்பாலான மூன்றாவது டி.என்.பி.எல்., போட்டிகள் திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்திலும், திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லூரி மைதானத்திலும் நடைபெறும். இதன் மூலம் மாவட்டங்களில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு இப்போட்டிகள் ஒரு உத்வேகமாக அமையும். இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தலா ஏழு போட்டிகளில் விளையாடி அதில் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்கும்.

எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடும். மேலும், காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கி அவற்றின் பெயர்களை ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை லீல் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

பரிசுக்கள்

வெற்றி பெறும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய நான்கு அணிகளுக்கு ரூ. 25 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...