உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்து : அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கடந்த 14-ம் தேதி உதகை அருகே மந்தடா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்கியதுதான் காரணம் எனப் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பேருந்து விபத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமிது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விபத்திற்குக் காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்கக் கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற் பொறியாளர், பொறியாளர் ஆகிய 4 அதிகாரிகள் மேல் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இனி இதுபோல, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். உதகையில், முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்பட ண100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...