'மரணமடைந்தவர்களை எடுத்து செல்ல மரண வேதனை அடைகிறோம்': நீலகிரி மக்கள் கண்ணீர் மனு

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரட்டி ஊராட்சி பாரத் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்பாரத் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 40 வருடங்களாக எங்களுக்கு சாலை வசதியே இல்லை. பிரசவம் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்லும் போது கடும் வேதனைகளை சந்திக்கிறோம் மரணமடைந்தவர்களை எடுத்து செல்லும் போது மரண வேதனை அடைகிறோம்.

கழிவறை கழிவுகளை அப்புறப்படுத்த சாலை வசதி இல்லாததால் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதது. தனியார் நிலம் வழியாக ஒற்றையடி பாதையில் சென்று வருகிறோம். எனவே அந்த பாதையை சாலையாக மாற்றித் தந்தால் அவசர தேவைகளுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...