சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும்: பா.ம.க.,வினர் ஆட்சியரிடம் மனு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகரில் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுவதை தவிர்க்க அரசு அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும், காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் நூறடி சாலையில் உள்ள மேம்பாலத்தை பார்ப்பதற்கும், பயணிப்பதற்கும் பயணிகள் அச்சப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பிறகு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும், ஆவாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே பாலம் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...