அதிகாரிகள் ரெய்டு: கோவையில் விற்பனைக்கு வைத்திருந்த பான்மசாலா, கலப்பட டீ தூள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் உணவு பாதுகப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பான்மசாலா மற்றும் கலப்பட டீ தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அவ்வாறு சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருட்கள், கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். கடந்த வாரம் அன்னூர் பகுதியில் நடத்திய சோதனையில் பிரபல சமையல் எண்ணெய் பெயரில் இயங்கி வந்த போலி எண்ணெய் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். 



இந்த நிலையில், இன்று உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் எட்டு அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சூலூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நடத்திய சோதனையின் போது, 1.4 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட குட்கா மற்றும் பான்மசாலா, கலர் சில்லி பவுடர்கள், இரண்டு கிலோ கலப்பட டீ தூள், சேதமடைந்த பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், இந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...