கோவையில் மனநலம் பாதித்த மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை

கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தெப்பக்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க முடியாத வயதான தந்தை, மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெப்பக்குளம் அருகே உள்ள லிங்கப்ப செட்டி வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் முத்து. இவரது மனைவி வேலம்மாள். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து, மகன் கணேசன் மற்றும் மகள் ராதாவை முத்து பராமரித்து வந்தார்.

நாற்பது வயதான கணேசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 20 வருடங்களாக வீட்டிலே வைத்து பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது கணேசன் ஆக்ரோசத்தோடு நடந்து கொண்டு, அவரது தந்தையை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு கணேசன் மீண்டும் ஆக்ரோசமாக நடந்து கொண்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அவரது வயதான தந்தை, மயக்க மாத்திரைகளை கணேசனுக்கு கொடுத்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை கணேசனின் தலையில் போட்டு கொலை செய்தார். 



அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஆர்.எஸ். புரம் போலீசார் கணேசனின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், முத்துவை கைது செய்தனர்.



Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...