மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலருக்கு தர்ம அடி

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (50). இவர் அதே பகுதியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் அவர்களது மாட்டு வண்டியை மட்டும் பறிமுதல் செய்துள்ளார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த மணல் கொள்ளையர்கள் இருவரும் ராஜேந்திரனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் மீது மணல் கொள்ளையர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...