மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலருக்கு தர்ம அடி

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வேலூர் அருகே மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட காவலரை மணல் கொள்ளையர்களே அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (50). இவர் அதே பகுதியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் அவர்களது மாட்டு வண்டியை மட்டும் பறிமுதல் செய்துள்ளார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த அந்த மணல் கொள்ளையர்கள் இருவரும் ராஜேந்திரனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் மீது மணல் கொள்ளையர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...