முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை: மூவர் கைது

திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ஊற்றுக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர் வகையில் மருமகன்.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று காலை பனியன் நிறுவனத்திற்கு சென்று வருவதாக காரில் வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்காமல் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சிவமூர்த்தியின் உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர்.



இந்த நிலையில், சிவமூர்த்தியின் சொகுசு கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெங்கிளி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்து தப்பியோடிய விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து இரண்டு நாட்களாக காரில் வைத்து வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி இடையே பயணித்ததாகவும், இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் உடலை வீசி இருந்ததாகவும் தெரிவித்தனர்.



மேலும், சிவமூர்த்தி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததால், அந்த பெண்ணின் கணவர் இந்த கொலையை செய்ததாக தகவல் அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...