மரக்கிளைகளுக்கு இடையே மரண பயத்தை ஏற்படுத்தும் மின்சாரக் கம்பிகள்

கோவை: பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள கரிகாளியம்மன் கோவில் கடைசி வீதியில் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் அறுந்து நிலையில் உள்ளது. அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: பீளமேடு ரயில்நிலையம் அருகே உள்ள கரிகாளியம்மன் கோவில் கடைசி வீதியில் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் அறுந்து நிலையில் உள்ளது. அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை பீளமேடு ரயில்நிலையம் மற்றும் பீளமேடு மெயின் ரோடு செல்லவும் கரிகாளியம்மன் கோவில் வீதிகள் பிரதானமாக உள்ளது. ஐந்து வீதிகளை கொண்ட இத்தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கடைசி தெருவில் உள்ள சீனிபுளியங்காய் மரக்கிளைகள் மின்சாரக் கம்பிகள் மீது படர்ந்து செல்கிறது. 



இதனால் காற்று, மழை போன்ற காலங்களில் மரக்கிளைகளின் பாரம் தாங்காமல் கம்பிகள் அறுந்து கீழே விழுகின்றது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அதிகம் உள்ள அத்தெருவில் காலை, மாலை வேலைகளில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் குழந்தைகள் தெரியாமல் மின் கம்பிகளை மிதிக்கும் சூழல் ஏற்படும், வாகனங்களில் செல்லும் மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.



இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் இல்லத்தரசி ஜெயக்கவிதா கூறுகையில், "நான்கு ஆண்டுகளாக பீளமேடு துணை மின் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. மழைக் காலங்களில் குழந்தைகள் அறுந்து விழுந்த மின்கம்பிகளை மிதித்து விடுவார்களோ? என்கிற அச்சம் மிகுதியாக உள்ளது. உயிர் பலி போகும் முன் இந்த மரக்கிளைகளை அகற்றி மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மரக்கிளைகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...