லட்சுமி மில்ஸ் சிக்னலில் காத்துக்கிடந்த ஆம்புலன்ஸ் : போக்குவரத்தை சீர்ப்படுத்தாத போலீசார்

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கோவை: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையினரால் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. அதனினும் ஒருபடி மேலாக, ஆம்புலன்ஸ் 'சைரன்' சத்தம் கேட்டவுடன் துரிதமாக செயல்பட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்காக பொறுப்பும், கடமையும் போக்குவரத்து போலீசாருக்கு உள்ளது. 



இந்த சூழலில், இன்று லட்சுமி மில்ஸ் சிக்னலில் போக்குவரத்து காவலர் பணியில் இருந்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தித் தர தவறியுள்ளார். 

இதன் காரணமாக அந்த ஆம்புலன்ஸ் சிக்னலிலேயே சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகிறது. ஒருவரை காப்பாற்ற முகாந்திரம் உள்ள நேரத்தினை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்ஸ்' என்று அழைப்பதுண்டு. அப்படியான பொன்னான நேரத்தை ஆம்புலன்சுகள் இப்படி சிக்னல்களிலேயே வீணாக்குகின்றன.

இதை காவல்துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு, முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...