சாரைப்பாம்பை வறுத்து உண்பதாக பேஸ்புக் பதிவு: வன ஆர்வலர்கள் கடும் கண்டனம்

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: விவசாய நிலத்தில் இருந்த சாரைப்பாம்பு ஒன்றை கொன்று உண்டதாக ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வான உயிரின ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சுப்ரமணியம். இவர் சாரைப்பாம்பு ஒன்றை கொன்று அதனை கையில் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை வறுத்து உண்ணவிருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.



இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சிராஜூதீன் கூறுகையில், "வன உயிரினங்களை வதைப்பது சட்டப்படி தவறு. கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே பறவைகளை வேட்டையாடி நான்கு பேர், அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கவே அந்த நால்வரும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மற்றொருவர் சாரைப்பாம்பை கொன்று உண்பதாகப் பதிவு செய்துள்ளார்.

உழவனுக்கு நண்பனாக விளங்கும் சாரைப்பாம்பை விவசாய நிலத்தில் வைத்தே கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. விசத்தன்மை இல்லாத சாரைப்பாம்பானது, விவசாய நிலத்தில் உள்ள எலி போன்ற உயிரினங்களை உண்டு, பயிர்களை சேதமடையாமல் பாதுகாக்கும் நண்பன்.



எனவே, இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...