எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியல் - கோவைக்கு பெருமை சேர்த்த மாணவியின் பேட்டி

கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


கோவை: எஞ்சினியரிங் தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி. இவர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து நமது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.



தனது படிப்பு, எதிர்காலத் திட்டம் குறித்து கீர்த்தனா சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் கோவை மாவட்டம் சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர். எனது தந்தை வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அம்மா பாலக்காட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இதன் காரணமாக, நான் பாலக்காட்டில் உள்ள பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியிலேயே படித்து முடித்தேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றேன். பிறகு எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தேன். அதே நேரத்தில் எனக்கு டெல்லியில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரியில் வேதியியல் துறையில் இடம் கிடைத்தது. தற்போது அங்கு தான் படித்து வருகிறேன். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பதை இன்னும் முடிவெடுக்கவில்லை.

நான் இந்த மதிப்பெண் பெற முழு காரணம் எனது பள்ளி ஆசிரியர்கள் தான். தினமும் அங்கு சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்த காரணத்தால் தான் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. அடுத்து வரும் மாணவர்கள் சிரமப்பட்டு படிக்காமல், 'ஸ்மார்ட்'ஆக படித்தால் சுலபமாக இந்த மதிப்பெண் பெற முடியும்.

என்று கூறினார் கீர்த்தனா ரவி.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...