பி.எஸ்.ஜி. ராஜன் நினைவாக மல்லேகவுண்டன்பாளையத்தில் இருதய நல மையம் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை: பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ வி.ராஜன் நினைவாக பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் இலவச இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்.


கோவை: பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ வி.ராஜன் நினைவாக பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் இலவச இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பல்லடம்-கரடிவாவி சாலையில் மல்லேகவுண்டன்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை பி.எஸ்.ஜி. அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது. அந்த கிராமத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வரும் பி.எஸ்.ஜி. அறக்கட்டளை, அந்த ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் இருதய நல மையத்தை நிறுவியுள்ளது.

வி.ராஜன்

பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலராக பதவி வகித்த ஸ்ரீ வி.ராஜன் நினைவாக இந்த இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி கலந்து கொண்டு இலவச இருதய நல மையத்தைத் திறந்து வைத்தார். 

விழாவில் பி.எஸ்.ஜி. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, இதய நோய் தொடர்பாக மல்லேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது.

ஐந்து வழிமுறைகள்

விழாவில், பி.எஸ்.ஜி மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பேசியதாவது, "நமது உடல் உறுப்புகளில் இடைவெளி இல்லாமல் செயல்படும் உறுப்பு இருதயம். நாம் அதனை முறையாக பாதுகாக்க வேண்டும். இதயத்தை பாதுகாக்க ஐந்து வழி முறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

காலை உணவு, தினமும் 20 முதல் 30 நிமிட உடற்பயிற்சி, காலை மதிய மற்றும் இரவு நேர உணவுகளின் இடையில் ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இது மட்டுமல்லாது, தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிக்காமல் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வோம். ஆழ்ந்த தூக்கம் இதயத்தை வலிமைப்படுத்தும். ஐந்தாவது வழிமுறையாக, ஒரே இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அமரக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் எழுந்து நிற்கவோ அல்லது நடக்கவோ செய்தால் இதயம் நன்றாக இருக்கும். 

இன்றைய காலகட்டத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. இது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

மேற்கூறிய ஐந்து வழிமுறைகளை கடைபிடித்தால் மல்லேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த மக்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

 

இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து பி.எஸ்.ஜி. நிர்வாகத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...