சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



கோவை மாநகராட்சியில் தண்ணீர் வழங்கும் உரிமத்தை தனியார் நிறுவனமாக சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் பேசுகையில், "மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தனியார் பிரென்சு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே அந்நிறுவனத்துடனான 30 பக்க ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

குடிநீரை வழங்க வேண்டிய அரசின் கடமை என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் அரசை கேள்வி கேட்டாலும் கைது என்ற நடவடிக்கை, தமிழகம் மற்றும் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை போல் உள்ளது." என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...