டிராவல்ஸ் கார்களை திருடி அடமானம் வைத்தவரை போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்கள்

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்துக் கொள்வதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கார்களை எடுத்துச் சென்று அடமானம் வைத்த கும்பலைச் சேர்ந்த நபரை டிராவல்ஸ் உரிமையாளர்கள் பிடித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது டிராவல்ஸ் நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் 6 கார்களை வாடகைக்கு எடுத்து ஏமாற்றியதாகவும், மேலும், தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பல டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அஜித் சொல்லியதாகக் கூறி கார்களை எடுத்துச் சென்ற சந்துரு என்பவரை பாதிக்கப்பட்டவர்கள் தேடிப் பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 



மேலும், கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்து மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...