மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருமலையம்பாளையம் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் கனகராஜ் (21). அதேபோல, குட்டிகவுண்டன்பதி புதுகாலனியைச் சேர்ந்த வெங்கடாசலத்திற்கு 17 வயது மகள் உள்ளார். இவர், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 27-ம் தேதி சந்தியா வீட்டை விட்டு வெளியே வந்து கனகராஜை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், தனது பேத்தியை காணவில்லை எனக் கூறி சிறுமியின் தாத்தா க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, கனகராஜின் பெற்றோர்களை அழைத்த காவல் துறையினர் திருமணம் செய்து கொண்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...