உடல்நலக் குறைவால் கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டியார் காலமானார்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் தனது சகோதரர் சண்முகத்துடன் தோட்டத்து விட்டில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி வசித்து வந்தார். இவர், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.

இவரது உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று மாலை 7 மணியளவில் அவரது இல்லத்திற்கு அருகே நடைபெறுகிறது. இதனையடுத்து, கோவை தெற்கு மாவட்டம் உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தி.மு.க.,வினர் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டனர். இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், கலை இலக்கிய பேரவை உமாபதி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று உறவினரிடம் துக்கம் விசாரித்தனர்.

காட்டம்பட்டி கந்தசாமி, 1989-1991 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1972 -1977 வரை மாநிலக் கூட்டுறவு வங்கி இயக்குநராகப் பதவி வகித்துள்ளார். மேலும், சிறு வயது முதலே தி.மு.க.,வின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு 1960-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழப் பிரச்சினை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...